ஆப்நகரம்

சச்சினை தொடர்ந்து கங்குலியையும் ஓரங்கட்டி சாதனை படைத்த தவான்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலில் சச்சினை ஓரங்கட்டிய தவான், தற்போது கங்குலியையும் ஓரங்கட்டியுள்ளார்.

TOI Sports 15 Jun 2017, 8:42 pm
பர்மிங்ஹாம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலில் சச்சினை ஓரங்கட்டிய தவான், தற்போது கங்குலியையும் ஓரங்கட்டியுள்ளார்.
Samayam Tamil shikhar dhawan goes past ganguly to become indias highest run getter in champions trophy
சச்சினை தொடர்ந்து கங்குலியையும் ஓரங்கட்டி சாதனை படைத்த தவான்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது.

பர்மிங்ஹாமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை, ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷிகர் தவான் 46 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை (665 ரன்கள், 13 போட்டிகள்), தவான் (680 ரன்கள், 9 போட்டிகள்) ஓரம்கட்டி முதலிடம் பிடித்தார்.

முன்னதாக, ஐசிசி தொடர்களில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், தவான், ஜாம்பவான் சச்சினை ஓரம்கட்டினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்