ஆப்நகரம்

ஷ்ரேயஸ் ஐயர் கொடுத்து வச்சவருங்க…பெரிய ஆள்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டாரு: தினேஷ் கார்த்திக் வாழ்த்து!

ஷ்ரேயஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

Samayam Tamil 25 Nov 2021, 1:54 pm
இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று துவங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு விளையாடி வருகிறது.
Samayam Tamil ஷ்ரேயஸ் ஐயர்


ஷ்ரேயஸ் ஐயர் அறிமுகம்:

டாஸ் போடுவதற்கு முன்பு இந்திய வீரர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது திடீரென்று சுனில் கவாஸ்கர் அந்த இடத்திற்கு வந்தார். அப்போது பேசிய ரஹானே, “ஷ்ரேயஸ் ஐயர் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சுனில் கவாஸ்கர் தனது கையில் இருந்த தொப்பியை, ஷ்ரேயஸ் ஐயரிடம் கொடுத்து அணிக்கு வரவேற்றார். அதன்பிறகு, வாழ்த்துக்கள் கூறி சில வார்த்தைகள் பேசினார்.



இதனைத் தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர், ஷ்ரேயஸ் ஐயருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தினேஷ் கார்த்திக் வெளியிட்ட ட்வீட்டில், “இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரிடம் இருந்து கௌரவத்தைப் பெற்றுள்ளீர்கள் ஷ்ரேயஸ் ஐயர். இதன்மூலம், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதராக மாறியிறுக்கிங்க. உங்களது உழைப்பு கிடைத்த பரிசு. டெஸ்டில் பெரிய உச்சங்களை தொட எனது வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் வெளியிட்ட ட்வீட்டில், “கடந்த சில வருடங்களில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தீர்கள் என்பதை பார்த்திருக்கிறேன். டெஸ்ட் அணியில் இடம்பெற நீங்கள் தகுதியானவர். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்