ஆப்நகரம்

Ind: ஷ்ரேயஸ் ஐயர் நீக்கம்…டெல்லி அணிக்கு அஸ்வின் கேப்டன்?

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 24 Mar 2021, 7:07 pm
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அப்போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஷ்ரேயஸ் ஐயர், பவுண்டரி நோக்கிச் சென்ற பந்தைத் தடுப்பதற்காக இடது கையை நீட்டி தாவினார்.
Samayam Tamil ஷ்ரேயஸ் ஐயர்


அப்போது, கை தரையில் பட்ட வேகத்தில் வலியால் துடித்து, கீழே சாய்ந்தார். களத்திற்குள் மருத்துவர்கள் விரைந்தனர். அதன்பிறகு, பெவிலியனுக்கு திரும்பினார். களத்திற்குள் மீண்டும் வரவில்லை.

வலி குறையாததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “ஷ்ரேயஸ் ஐயரின் தோள்பட்டை எலும்பு ஒருபக்கமாக விலகியிருப்பதாக” தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள பிசிசிஐ, “இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஷ்ரேயஸ் ஐயர் பங்கேற்கமாட்டார் என தெரிவித்துள்ளது.

நடுவரை மிரட்டினாரா கோலி? இங்கிலாந்து முன்னாள் வீரர் பேட்டியால் பரபரப்பு!

காயத்தில் வீரியம் அதிகமாக இருப்பதால், ஐபிஎல் 14ஆவது சீசனின் சில போட்டிகளிலும் அவர் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏப்ரல் 9ஆம் தேதி முதல் துவங்கும் முதல் சில போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் வழிநடத்த அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜிங்கிய ரஹானே, ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பந்த் போன்றவர்களுக்கும் இந்த ரேசில் உள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்புகளை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்