ஆப்நகரம்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயர்…ரசிகர்கள் வாழ்த்து!

ராயல் லண்டன் கோப்பை தொடரில் விளையாட ஷ்ரேயஸ் ஐயர் ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 23 Mar 2021, 9:59 am
ராயல் லண்டன் கோப்பை தொடர் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில், லங்காஷயர் அணிக்காக விளையாட இந்திய அணி வீரர் ஷரேயஸ் ஐயர் ஒப்பந்தமாகியுள்ளார். 50 ஓவர்கள் கொண்ட இத்தொடரில் பங்கேற்பதற்காக ஜூலை 15ஆம் தேதி மான்செஸ்டர் செல்வார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ஷ்ரேயஸ் ஐயர்


ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியில் 4ஆவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறார். இதுவரை 21 ஒருநாள் மற்றும் 29 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.

ஷ்ரேயஸ் ஐயர் ஒப்பந்தம்:

லங்காஷயர் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளது குறித்து தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஷ்ரேயஸ், “இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் லங்காஷயர் மிகவும் பழமையான அணி. இந்த அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் போன்றவர்கள் விளையாடிய அணியில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

ரசிகர்கள் வாழ்த்து:

மேலும் பேசிய அவர், “மான்செஸ்டர் மைதானம் உலகத் தரம் வாய்ந்த மைதானம். அங்கு எனது அணியினரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் கூறினார். புகழ்பெற்ற ராயல் லண்டன் கோப்பை தொடரில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள ஷ்ரேயஸ் ஐயருக்கு தற்போது வாழ்த்துகள் குவித்து வருகிறது.

ஐபிஎலில் அதிரடி:

26 வயதாகும் ஷரேயஸ் ஐயர், ஐபிஎல் 13ஆவது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் தலைமையேற்று இறுதிப் போட்டி வரை கூட்டிச் சென்றார். இத்தொடரில் அவர் 123 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 519 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடம் பிடித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற்றிருந்தார். தற்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்