ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டம்: ஷுப்மன் கில் ஆதரவு!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஷுப்மன் கில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Dec 2020, 8:51 am
பஞ்சாபைச் சேர்ந்த இந்திய அணி இளம் வீரர் ஷுப்மன் கில், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பில் விவசாயி படத்தை வைத்துள்ளார்.
Samayam Tamil shubman gill


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 19 நாட்களாக மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் புதுமையான போராட்டத்தை அறிவித்து வரும் இவர்கள், இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விளையாட்டுத் துறையினரிடமிருந்தும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

12ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய யுவராஜ் சிங், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் மூலம் அறிக்கை வெளியிட்டார். அதில், விவசாயிகள் மத்திய அரசுக்கு இடையில் சுமுக தீர்வு எட்டப்பட்ட வேண்டும். விளையாட்டு வீரர்கள் விருதுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தந்தை யோக்ராஜ் கூறியது எனக்கு மனவேதனையை அளித்தது. அது அவரின் சொந்த கருத்து. அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

சித்ரா நடித்த முதல் படம்; மறைந்த பிறகு வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

யுவராஜின் தந்தை யோக்ராஜ் டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் பேசிய அவர், “விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை மத்திய அரசிடம் திருப்பி தரவேண்டும்” எனப் பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், டெல்லி-ஹரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து, புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் ராஜீவ் காந்தி கேல் ர்தனா விருதைத் திருப்பி அளிப்பேன் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பவுன்சருக்கு நாங்கதான் அடையாளம்: பேச்சிலேயே மிரட்டும் ஹேசில்வுட்!

அடுத்து, தேசிய முன்னாள் குத்துச் சண்டை பயிற்சியாளர் குர்பாத் சிங் சந்து தனது துரோணச்சார்யா விருதை திருப்பி அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.

யோக் ராஜ் தொடர்ந்து வன்முறை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக டெல்லி பல்கலைக் கழக மாணவ தலைவர் ஒருவர் கண்டனம் தெரிவித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் தற்போதுவரை யுவராஜ் சிங், ஷுப்மன் கில் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்