ஆப்நகரம்

ஷுப்மன் கில் அபாரம்: ஷார்ட் பால் ஆயுதத்தைப் பயன்படுத்தும் ஆஸி!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 19 Jan 2021, 7:52 am
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது (கடைசி) டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 369/10 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை 294/10 ரன்களுக்கு முடித்துக்கொண்டு, இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
Samayam Tamil shubman


தற்போது, கடைசி நாள் முதல் செஷன் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 83/1 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிபெற 245 ரன்கள் தேவை.

நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி செஷன் நிறைவடைந்தபோது ரோஹித் ஷர்மா 4 (6), ஷுப்மன் கில் 0 (5) களத்தில் இருந்தனர். இன்றைய நாள் துவக்கத்தில் ரோஹித் 7 (21) பேட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார்.
ஆஸி தடுமாறுவதற்கு இதுதான் காரணம்: ஷேன் வார்ன் கணிப்பு!
இதனால், ஆட்டம் பரபரப்படைந்தது. அடுத்து சேத்தேஸ்வர் புஜாரா களமிறங்கி வழக்கமான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மறுமுனையில் ஷுப்மன் கில் ரன் சேகரிப்பில் ஈடுபட்டு ஸ்கோரை உயர்த்தி வருவதால், இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இவரை பெவிலியனுக்கு அனுப்ப ஆஸி கடுமையாக முயற்சித்தும் எதுவும் பலனளிக்கவில்லை. தற்போது அரை சதம் கடந்துள்ளார்.

இதன்மூலம், நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணிக்காக இளம் வயதில் (21 வருடம், 133 நாட்கள்) அரை சதம் கடந்தவராக ஷுப்மன் மாறியுள்ளார். இதற்குமுன் சுனில் கவாஸ்கர் (21 வயது, 243 நாட்கள்) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நான்காவது இன்னிங்ஸில் 67* அடித்ததே சாதனையாக இருந்தது.

புஜாரா தடுப்பாட்டத்தில் ஆட, ஷுப்மன் கில் அடித்து ஆடி வருகிறார். ஆஸி தரப்பு ஷார்ட் பால்களை அதிகம் பயன்படுத்தி வருகிறது. தற்போது கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நிறைவடைந்துள்ளது. கில் 64* (117), புஜாரா 8* (90) ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர்.
தப்புக் கணக்கு போட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய அணி!
இன்னும் இரண்டு செஷன்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்திய அணி வெற்றிபெற 245 ரன்கள் தேவை. கடைசி செஷனில் மழை குறுக்கிடும் என பிரிஸ்பேன் வானிலை மையம் தெரிவித்துள்ளதால் இரண்டாவது செஷன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 எனச் சமநிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்