ஆப்நகரம்

IND vs ZIM: 'ஓபனருக்கான இடத்திற்கு'...3 பேர் போட்டி: இதை எப்படி சமாளிக்க முடியும்? EX-தேர்வுக்குழு உறுப்பினர் தரமான பதில்!

ஆகஸ்ட் 28 தொடங்கவிருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கு முன் இந்திய அணி, ஜிம்பாவேக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.

Samayam Tamil 15 Aug 2022, 5:50 pm
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் இருந்த கே.எல்.ராகுல் தற்போது ஜிம்பாப்வே தொடர் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளதால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் வந்துவிட்டதால் ஓபனருக்கான இடத்திற்கு தவன், ராகுல், கில் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டியும் நிலவுகிறது.
Samayam Tamil ஷிகர் தவன், கே.எல்.ராகுல்


அணிக்கு திரும்பிய கே.எல். ராகுல்

நீண்ட ஓய்வு பிறகு ராகுல் அணிக்கு திரும்பியிருப்பதால், புத்துணர்ச்சியுடன் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. இவருடன் ஓபனராக களமிறங்க வாய்ப்புகள் உள்ள தவன், கில் இருவரும் கடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்கள். 205 ரன்களை அடித்து சுப்மான் கில் அசத்தினார். தவனின் ஆட்டத்திலும் எந்த குறையும் இல்லை.

இதனால் இருவரில் யார் கே.எல்.ராகுலுடன் ஓபனராக களமிறங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது நமது டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் தேவங் காத்தி, இந்த பிரச்சினைக்கு அற்புதமான தீர்வு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

தேவங் காந்தி பேட்டி:

"இந்திய அணி நிர்வாகத்தால் சுப்மன் சரியான முறையில் வளர்க்கப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் கரீபியன் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாகச் விளையாடினார். இவரை ஒன் டவுன் இடத்திலும் களமிறக்கி சோதித்து பார்க்க வேண்டும். அதற்கு ஜிம்பாப்வே தொடர் மிகச்சரியானது என நினைக்கிறேன்’’

‘‘3 இடத்தில் இறங்குவது கொஞ்சம் சவாலான காரியம் தான். ஒபனர் அவுட் ஆனால் உடனே இறங்கி விளையாட வேண்டும். இதனை கில் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். கம்பேக் கொடுத்துள்ள கே.எல்.ராகுலுக்கு அதிக நேரம் தேவை என்பதால், அவர் ஓபனராக களமிறங்க வேண்டிய நிலை இருக்கிறது.’’

‘‘கில் 3ஆவது இடத்தில் களமிறங்க வேண்டும் என்பது தற்காலிகமானதுதான். அடுத்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் என்றால், அவர் ஓபனராக மட்டுமல்ல ஒன் டவுன் வீரராகவும் சிறப்பாக செயல்பட்டு தேர்வுக்குழுவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஜிம்பாப்வை தொடரில் அதற்கான வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி கிடைத்தால், ஜிம்பாப்வே தொடரை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்