ஆப்நகரம்

அடம்பிடித்தால் 6 மாதம் தடை: ஆஸி., வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு சம்மதிகாகவிட்டால், 6 மாதம் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

TNN 29 Jun 2017, 8:16 pm
கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு சம்மதிகாகவிட்டால், 6 மாதம் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil six month ban looms on australian players for participation in unapproved cricket
அடம்பிடித்தால் 6 மாதம் தடை: ஆஸி., வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் மிரட்டல்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கும் இடையே சம்பளம் ஒப்பந்தம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கின்றனர். இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடிக்கிறது.

கேட்கும் சம்பளம் கிடைக்காவிட்டால் ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்க வீரர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தற்போதைய ஒப்பந்தம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும். இதனால், கிரிக்கெட் வாரியம் தங்கள் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத வீரர்கள் அனைவரையும் 6 மாதம் தடை செய்யப்போதவாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்