ஆப்நகரம்

தவான் அசத்தல் சதம்: வலுவான நிலையில் இந்தியா!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்தியாவின் துவக்க வீரர் தவான் சதம் அடித்து அசத்த இந்திய அணி வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.

TOI Sports 12 Aug 2017, 2:51 pm
கண்டி: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்தியாவின் துவக்க வீரர் தவான் சதம் அடித்து அசத்த இந்திய அணி வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.
Samayam Tamil sl claw back as pujara falls
தவான் அசத்தல் சதம்: வலுவான நிலையில் இந்தியா!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் இன்று துவங்கியது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில், பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணிக்கு, ராகுல், தவான் ஜோடி துவக்கம் அளித்தது.

இப்போட்டியின் துவக்கம் முதலே இலங்கை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. அந்த அணியின் பீல்டர்கள், ராகுல், தவான் ஆகியோர் தலா ஒரு முறை கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட, இந்த ஜோடி நங்கூரமாக நின்றது.

வாய்ப்பை பயன்படுத்திய ராகுல், தவான் இருவரும் அரைசதம் (85) கடந்து அவுட்டானார். தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் தவான் (119) டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார். பின் வந்த புஜாரா (8) சொதப்பலாக வெளியேறினார்.

மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. கோலி (11), ரகானெ (3) அவுட்டாகாமல் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்