ஆப்நகரம்

சாம்பியன்ஸ் டிராபி : இலங்கை அணி பவுலிங்!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி, முதலில் ‘ பேட்டிங்’ தேர்வு செய்தது.

TOI Sports 3 Jun 2017, 3:39 pm
லண்டன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி, முதலில் ‘ பேட்டிங்’ தேர்வு செய்தது.
Samayam Tamil sl won the toss and choose to bowl first against sa
சாம்பியன்ஸ் டிராபி : இலங்கை அணி பவுலிங்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.

இதில் லண்டனில் நடக்கும் ‘பி’ பிரிவு மூன்றாவது லீக் போட்டியில், இலங்கை அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர் கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்கா, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதில் இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக உபுல் தரங்கா கேப்டன் பொறுப்பை ஏற்றார். யார்க்கர் மலிங்கா சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

இதேபோல, தென் ஆப்ரிக்க அணியில், மில்லர், தாகிர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்