ஆப்நகரம்

புகை மூட்டம்; டெல்லியில் இருந்து ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம்

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நீடித்துவரும் புகை மூட்டம் காரணமாக, அங்கு நடைபெறவிருந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக, பிசிசிஐ அறிவித்துள்ளது.

TNN 8 Nov 2016, 1:29 am
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நீடித்துவரும் புகை மூட்டம் காரணமாக, அங்கு நடைபெறவிருந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக, பிசிசிஐ அறிவித்துள்ளது.
Samayam Tamil smog effect bcci moves two more ranji games from delhi
புகை மூட்டம்; டெல்லியில் இருந்து ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் இடமாற்றம்


பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’ டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் புகை மூட்டம் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் அங்குள்ள பெரோஷ் ஷா கோட்லா மற்றும் கர்னைல் சிங் மைதானங்களில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இது விளையாட்டு வீரர்களுக்கு, உடல்நல பாதிப்ப ஏற்படுத்தக்கூடும் என்பதால், அங்கு நடைபெறவிருந்த போட்டிகள், மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 2 போட்டிகளும் லீக் சுற்றுப் போட்டிகள் என்பதால், அவற்றை பிசிசிஐ இடமாற்றம் செய்துள்ளது. அதேசமயம், டிசம்பர் 17ம் தேதி ரஞ்சி கோப்பை காலிறுதிச் சுற்றுப் போட்டிகளை டெல்லியில்தான் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத கால அவகாசம் உள்ளதால், அதற்குள் புகை மூட்டம் விலகிவிடும் என்றும், காலிறுதிப் போட்டிகள் திட்டமிட்டபடி, டெல்லியிலேயே நடைபெறும் என்றும், பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

In the wake of the smog that has engulfed the national capital, the BCCI has moved two matches for the next Ranji Trophy round, starting November 13, out of Delhi.

அடுத்த செய்தி

டிரெண்டிங்