ஆப்நகரம்

நடப்பது நடக்கும், பதவிக்கு ஆசைப்படவில்லை: ‘தாதா’ உறுதி

பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கு ஆசைப்படவில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

TNN 13 Jan 2017, 6:07 am
பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கு ஆசைப்படவில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sourav ganguly dismisses reports of him stepping down from post of cricket association of bengal president
நடப்பது நடக்கும், பதவிக்கு ஆசைப்படவில்லை: ‘தாதா’ உறுதி


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். அண்மையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக செய்தி வெளியானது. விரைவில் பிசிசிஐ தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தான் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் பிசிசிஐ தலைவர் பதவி பற்றி எந்த திட்டமும் இல்லை என்றும் கூறியுள்ளார் சவுரவ் கங்குலி. அத்துடன், லோதா குழு பரிந்துரைப்படி, பிசிசிஐ தலைவராவதற்கு மாநில கிரிக்கெட் சங்கத்தில் மூன்றாறு ஆண்டுகள் தலைவராக பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்