கொல்கத்தா: தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், ரோகித் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்கள் என முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் எளிய இலக்கை துரத்திய போதும் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் செயல்பாடுஅந்நிய மண்ணில் சரியில்லை என முன்னாள் கேப்டன் கங்குலி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில்,’ அந்நிய மண்ணில் தவான், ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. முரளி விஜய், கோலி தான் ஆசியாவுக்கு வெளியே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். புஜாராவும் துணைக்கண்டத்தில் தான் அதிக சதம் விளாசியுள்ளார். ஆனால் ராகுல் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளிலும் சாதித்துள்ளார். அதனால் கோலி, ரவி சாஸ்திரி உடனடியாக அணியில் மாற்றம் செய்யவில்லை என்றால் தொடர் தோல்விகளை தவிர்க்க முடியாது.’ என்றார்.
India will hope to make a comeback in the second Test at Centurion, starting on Saturday.
தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் எளிய இலக்கை துரத்திய போதும் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் செயல்பாடுஅந்நிய மண்ணில் சரியில்லை என முன்னாள் கேப்டன் கங்குலி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில்,’ அந்நிய மண்ணில் தவான், ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை. முரளி விஜய், கோலி தான் ஆசியாவுக்கு வெளியே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். புஜாராவும் துணைக்கண்டத்தில் தான் அதிக சதம் விளாசியுள்ளார். ஆனால் ராகுல் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளிலும் சாதித்துள்ளார். அதனால் கோலி, ரவி சாஸ்திரி உடனடியாக அணியில் மாற்றம் செய்யவில்லை என்றால் தொடர் தோல்விகளை தவிர்க்க முடியாது.’ என்றார்.
India will hope to make a comeback in the second Test at Centurion, starting on Saturday.