ஆப்நகரம்

இந்திய அணியின் 4வது இடத்தை பிடிக்க 3 வீரர்கள் மங்காத்தா...

தற்போதுள்ள இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 4வது இடத்தை பிடிப்பதில் 3 வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

TOI Sports 16 Dec 2017, 3:19 pm
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 4வது இடத்தை பிடிப்பதில் 3 வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
Samayam Tamil south africa tour three players in race for no 4 dinesh karthik manish pandey shreyas iyer
இந்திய அணியின் 4வது இடத்தை பிடிக்க 3 வீரர்கள் மங்காத்தா...


ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர் வெளிநாடுகளில் நடைப்பெறும் போட்டித்தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக தற்போது நடைப்பெற்று வரும் ஒருநாள் போட்டியில் சிரேயாஸ் ஐய்யர், தினேஷ் கார்த்திக், மணீஸ் பாண்டே ஆகிய 3 வீரர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் தென் ஆப்ரிக்கா தொடரின் போது கோலி அணிக்கு திரும்பி விடுவார். அதோடு ரஹானே அணியில் சேர்க்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. மீதமுள்ள அந்த 4வது இடத்தில் களமிறங்கும் வீரருக்கான போட்டியில் மணீஸ் பாண்டே, தினேஷ் கார்த்திக், சிரேயாஸ் ஐய்யர் இடையே போட்டி அதிகரித்துள்ளது.

பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் மணீஸ் பாண்டே. அதே சமயம் இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிரேயாஸ் 88 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணியில் 4வது இடத்தை அணியில் பிடிக்க கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்