ஆப்நகரம்

வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா, ஒயிட் வாஷை தடுக்குமா இந்தியா??

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது

Samayam Tamil 27 Jan 2018, 6:16 pm
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
Samayam Tamil south african team cruising towards victory as indian team struggles to avoid white wash
வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா, ஒயிட் வாஷை தடுக்குமா இந்தியா??


தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் தென் ஆப்ரிக்க அணி வென்றது. மூன்றாவது டெஸ்ட் ஜோகான்ஸ்பர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 187 ரன்கள், தென் ஆப்ரிக்கா 194 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் வெல்லும் வாய்ப்பு உள்ளதால், நான்காம் நாள் ஆட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இன்று தொடங்கியது. முன்னதாக, மழையின் காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தொடங்க சிறிது காலதாமதமானது.

தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக களமிறங்கிய அம்லா மற்றும் எல்கர் ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவின் பந்துவீச்சாளர்களை கலங்கடித்தனர். தற்போது வரை அவர்கள் இருவரும் அவுட்டாகாததால் இந்திய அணி தோல்வியடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

46 ஓவர்கள் முடிந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 112 ரன்களை குவித்துள்ளது. அம்லா 42 ரன்களிலும், எல்கர் 53 ரன்களிலும் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இன்னும் 129 ரன்கள் மட்டுமே உள்ளதால் இந்திய அணி ஒயிட் வாஷை தவிர்க்க இயலாத சூழல் நிலவி வருகிறது. இதனால், இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்