ஆப்நகரம்

பிரதமர் மோடி முயற்சிக்கு ஆதரவாக விளக்கேற்றிய விளையாட்டு நட்சத்திரங்கள்!

இந்தியாவில் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அனைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்றுங்கள் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று விளையாட்டு நட்சத்திரங்களும் விளக்கு ஏற்றினர்.

Samayam Tamil 6 Apr 2020, 3:20 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு (ஏப்ரல் 5) 9 மணி முதல் 9.09 மணி வரை, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் மின்விளக்குகளை அனைத்து, அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஒளிர செய்தனர்.
Samayam Tamil சேவாக்


மக்கள் ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, குடியரசுத் தலைவர் தொடங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை, பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்கள் இல்லங்களில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தியில் தீபங்கள் ஏற்றினர்.தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான பொதுமக்கள் இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் பங்கேற்றனர்.

விளையாட்டு நட்சத்திரங்களும்
மக்களைப்போலவே இந்திய விளையாட்டு நட்சத்திரங்களும் இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் அவர்கள் இதை தங்களின் சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். அதில் சில
















அடுத்த செய்தி

டிரெண்டிங்