ஆப்நகரம்

ரஹீம் சதத்தால் மீண்டது வங்கதேசம்: இலங்கைக்கு 262 இலக்கு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி 261 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

Samayam Tamil 15 Sep 2018, 9:52 pm
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி 261 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
Samayam Tamil DnJUBrnWwAA7ElW


ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் 28 வரை துபாயில் நடக்கிறது. இன்று தொடங்கிய முதல் போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்கதேச அணி. அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்உத விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் முஷ்பிகூர் ரஹீம் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். அவருடன் ஓரளவுக்கு ஒத்துழைத்த முகமது மிதுன் 63 ரன்கள் அடித்தார்.

இறுதியில் வங்கதேச அணி 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரஹீம் 150 பந்துகளில் 144 ரன்கள் விளாசி கடைசியாக ஆட்டமிழந்தார். இதனையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
இப்போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் காயமடைந்து வெளியேறினார். ஆனால், அணியின் ஸ்கோரை உயர்த்த உதவும் வகையில் உடைந்த கையுடன் வந்து கடைசி விக்கெட்டுக்கு துணை நின்று அனைவரையும் நெகிழச் செய்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்