ஆப்நகரம்

இப்படி கேள்வி கேடுகும் படி வச்சுட்டீங்களே இந்தியா! - பரிதவிக்கும் இலங்கை அணி

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே அண்மையில் நடந்த முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 3-0 என மிக சிறப்பான வெற்றி பெற்றது. இதில் இலங்கையின் தோல்வி குறித்து, உரிய விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுள்ளது.

TOI Sports 17 Aug 2017, 6:18 am
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே அண்மையில் நடந்த முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 3-0 என மிக சிறப்பான வெற்றி பெற்றது. இதில் சொந்த மண்ணில் அடைந்த இலங்கையின் தோல்வி குறித்து, உரிய விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுள்ளது.
Samayam Tamil sri lanka sports minister calls for report on test series loss
இப்படி கேள்வி கேடுகும் படி வச்சுட்டீங்களே இந்தியா! - பரிதவிக்கும் இலங்கை அணி


இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி அடுத்து 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.

ஏற்கனவே டெஸ்டில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது.

விளக்கம் கேட்கும் விளையாட்டு அமைச்சர்:
இந்த தோல்வி குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் தயஸ்ரீ ஜெயசேகரா அறிக்கை கேட்டுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், வீரர்களின் திறமை மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. இந்திய அணி மிக வலுவான நிலையில் இருப்பது தெரிந்த விஷயம் தான், ஆனால் மிக கேவலமான தோல்விக்கு உரிய விளக்கம் தெரிந்துகொள்வது அவசியம்.

விரைவில் உரிய விளக்க அறிக்கை அளிக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்வு வாரியத்தின் தலைவரும், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரியாவிடம் கேட்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்