கொழும்பு: கடந்த 2011 உலகக்கோப்பை பைனலில் இலங்கை அணி தோல்வி குறித்து விசாரிக்க தயாராக இருப்பதாக, அந்நாட்டு விளையாட்டு துறை அமைசார் ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ல் இந்தியா, இலங்கை, வங்கதேச என மூன்று நாடுகள் இணைந்து 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியது. இதன் பைனலுக்கு இந்தியா, இலங்கை அணிகள் தகுதி பெற்றது.
இந்நிலையில் பைனல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக இலங்கை அணி வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதை இலங்கை அணி வேண்டுமென்றே தோற்றதாக அந்நாட்டு ‘மீடியா’ சந்தேகம் கிளப்பிது. இருப்பினும், இவ்விஷயம் அப்படியே முடிந்தது. சமீபத்தில் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு விளையாட்டு துறை அமைசார் ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டு விளையாட்டு துறை அமைசார் ஜெயசேகரா கூறுகையில்,’இந்த விவகாரம் தொடர்பாக ஒரு எழுத்துப்பூர்வ புகார் வரும்பட்சத்தில் உடனடியாக விசாரணை உத்தரவிட தயாராக உள்ளேன்.’ என்றார்.
COLOMBO: Sri Lanka sports minister Dayasiri Jayasekera said he is willing to order a probe on the 2011 World Cup final between India and Sri Lanka following concerns raised by former captain-turned-minister Arjuna Ranatunga.
கடந்த 2011ல் இந்தியா, இலங்கை, வங்கதேச என மூன்று நாடுகள் இணைந்து 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியது. இதன் பைனலுக்கு இந்தியா, இலங்கை அணிகள் தகுதி பெற்றது.
இந்நிலையில் பைனல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக இலங்கை அணி வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதை இலங்கை அணி வேண்டுமென்றே தோற்றதாக அந்நாட்டு ‘மீடியா’ சந்தேகம் கிளப்பிது. இருப்பினும், இவ்விஷயம் அப்படியே முடிந்தது. சமீபத்தில் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு விளையாட்டு துறை அமைசார் ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டு விளையாட்டு துறை அமைசார் ஜெயசேகரா கூறுகையில்,’இந்த விவகாரம் தொடர்பாக ஒரு எழுத்துப்பூர்வ புகார் வரும்பட்சத்தில் உடனடியாக விசாரணை உத்தரவிட தயாராக உள்ளேன்.’ என்றார்.
COLOMBO: Sri Lanka sports minister Dayasiri Jayasekera said he is willing to order a probe on the 2011 World Cup final between India and Sri Lanka following concerns raised by former captain-turned-minister Arjuna Ranatunga.