ஆப்நகரம்

இந்தியா வந்தடைந்த மலிங்கா தலைமையிலான இலங்கை அணி!

புதுடெல்லி: இந்திய அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் இந்தியா வந்தடைந்தனர்.

Samayam Tamil 2 Jan 2020, 1:15 pm
இந்தியா வரும் இலங்கை அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி ஜனவரி 5ஆம் தேதி கவுஹாத்தியில் துவங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் போர்டு நேற்று அறிவித்தது.
Samayam Tamil Malinga


மாத்யூஸ் வாய்ப்பு
இதில் சுமார் 18 மாதங்களுக்கு பின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மாத்யூசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2018 இல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி-20 போட்டியில் மாத்யூஸ் கடைசியாக பங்கேற்றார். இதற்கிடையில் நுவன் பிரதீப் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக கசுன் ரஜிதா அணியில் சேர்க்கப்பட்டார்.

ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு
இந்திய அணியை பொறுத்தவரையில் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஷிகர் தவன் மற்றும் ஜஸ்பிரீத் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.


அணி விவரம்
இலங்கை: லசித் மலிங்கா (கே), குசல் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, அவிஸ்கா பெர்ணாண்டோ, பானுகா ராஜபக்‌ஷே, ஒசாடோ பெர்னாண்டோ, தசுன் சானகா, ஏஞ்சலோ மாத்யூஸ், நிரோசன் டிக்வெலா, குசல் மெண்டிஸ், வானிடு ஹசரங்கா, லக்மன் பர்

இந்தியா: விராட் கோலி (கே), ஷிகர் தவன், ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஸ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், சிவம் துபே, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாத வ், ரவிந்திர ஜடேஜா, சார்துல் தாகூர், நவ்தீப் சாய்னி, ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.

தொடர் அட்டவணை
ஜனவரி 5 - முதல் டி-20 , கவுஹாத்தி
ஜனவரி 7 - இரண்டாவது டி-20, இந்தூர்
ஜனவரி 10 - மூன்றாவது டி-20, புனே

அடுத்த செய்தி

டிரெண்டிங்