ஆப்நகரம்

தட்டுத்தடுமாறும் இலங்கை அணி: இந்திய பவுலர்கள் அசத்தல்!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

TNN 28 Jul 2017, 12:24 pm
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.
Samayam Tamil sri lanka trail india by 311 runs at lunch on day 3
தட்டுத்தடுமாறும் இலங்கை அணி: இந்திய பவுலர்கள் அசத்தல்!


இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி காலே மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

தவான், புஜாரா சதம் அடித்ததால் வலுவான நிலையை எட்டிய இந்திய அணி 600 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை அணி மூன்றாவது நாள் உணவு இடைவேளையின் போது 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தில்ருவான் பெரேரா 90 ரன்களுடனும் லஹிரு குமாரா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசி சமி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் அஸ்வின், பாண்டியா, உமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சீரான இடைவெளிகளில் விக்கெட் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்