ஆப்நகரம்

நம்பர் 2 அணியை ஒயிட் வாஷ் செய்த இலங்கை - தென் ஆப்ரிக்கா மீண்டும் படுதோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியையும் வென்று இலங்கை தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

Samayam Tamil 23 Jul 2018, 6:16 pm
கொழும்பு : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியையும் வென்று இலங்கை தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
Samayam Tamil SL team


இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி 2 டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் ஜூலை 20 - 24ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த 2ம் டெஸ்ட் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் இலங்கை அணி 4வது நாளிலேயே 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை பேட்ஸ்மேன்களின் சிறப்பான பேட்டிங்கால் 338 ரன்கள் குவித்தது. தெ.ஆ அணியின் மகாராஜ் 9 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார்.

பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்க முதல் இன்னிங்ஸில் தனஞ்சயா 5, பெரேரா 4, ஹெரத் ஒரு விக்கெட் வீழ்த்த 124 ரன்னில் சுருண்டது.

தென் ஆப்ரிக்க போராட்டம் வீண் :
2வது இன்னிங்ஸில் இலங்கை 5விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்லெர் செய்தது. இதிலும் மகாராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த தெ.ஆ தியூனிஸ் டி ப்ரைனின் சதம் (10), டெம்பா புவாமா 63 ரன்கள் எடுக்க போராடி 290 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இலங்கை 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை வென்று தரவரிசையில் நம்பர் 2ம் இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்