ஆப்நகரம்

மாணவர்களை தாக்கியதாக சர்ச்சை கிரிக்கெட் வீரர் கைது

பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 11 Mar 2018, 12:40 pm
கொழும்பு : பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லா கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil sri lankan cricketer ramith rambukwella arrested
மாணவர்களை தாக்கியதாக சர்ச்சை கிரிக்கெட் வீரர் கைது


இலங்கை கிரிக்கெட் வீரர் ரம்புக்வெல்லா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல்லாவின் மகன். இவர் இலங்கை அணிக்காக 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் நாரஹேன்பிட் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களை இருவரை தாக்கியதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் போதையில் வாகனத்தை ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. கடந்த 2016ல் போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யபட்டார். 2013ல் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற போது, போதையில் விமானி அறையை திறக்க முயன்றதாக அப்போது பிரச்னை ஏற்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்