ஆப்நகரம்

கத்துக்குட்டியே கதறவிட்டாங்க.... இவிங்க இந்தியாவை என்ன செய்ய முடியும்: முரளி!

இலங்கை அணியின் இளம் வீரர்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக முன்னாள் சுழல் ஜாம்பவான் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

TOI Sports 28 Jul 2017, 4:45 pm
கொல்கத்தா: இலங்கை அணியின் இளம் வீரர்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக முன்னாள் சுழல் ஜாம்பவான் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sri lankan youngsters not doing enough muralitharan
கத்துக்குட்டியே கதறவிட்டாங்க.... இவிங்க இந்தியாவை என்ன செய்ய முடியும்: முரளி!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது.

இதில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக முன்னாள் இலங்கையின் சுழல் ஜாம்பவான் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில்,’இலங்கை மண்ணில் இதுவரை நடக்காத செயலை கத்துக்குட்டி ஜிம்பாப்வே அணி நிகழ்த்தி சென்றுவிட்டது. இந்நிலையில் பலமான இந்திய அணியை இந்த இளம் வீரர்கள் எப்படி சமாளிக்க முடியும். இளம் வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் அணிக்கு நல்லது. பல சீனியர் வீரர்களின் ஓய்வு, நிலையில்லாத அணி, இதெல்லாம் மாறாத வரை இலங்கை அணியால் சர்வதேச அளவில் சாதிக்க முடியாது.’ என்றார்.


KOLKATA: Muttiah Muralitharan on Thursday blamed non-performing youngsters and an unsettled combination for Sri Lankan cricket team's woes in recent times

அடுத்த செய்தி

டிரெண்டிங்