ஆப்நகரம்

SL vs BAN: ‘3 ஓவர்களில் முடிந்த ஆட்டம்’…பெர்ணான்டோ வேற லெவல் செய்கை: வங்கதேசம் படுதோல்வி!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றியைப் பெற்றது.

Samayam Tamil 27 May 2022, 1:44 pm
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டி டாக்காவில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Samayam Tamil இலங்கை அணி


வங்கதேசம் முதல் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 25/5 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் முஷ்பிசுர் ரஹீம் 175 (355), லிடன் தாஸ் 141 (246) இருவரும் அபாரமாக செயல்பட்டு அணியை மீட்டனர். இறுதியில் வங்கதேச அணி 365/10 ரன்களை குவித்தது.

இலங்கை முதல் இன்னிங்ஸ்:


இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இலங்கை அணியில் ஒசாக பெர்ணான்டோ (57), கருணரத்னே (80), மேத்யூஸ் (145), டி சில்வா (58), சண்டிமல் (124) என களமிறங்கியவர்களில் பெரும்பாலோனர் பெரிய ஸ்கோர் அடித்தார்கள். இனால், இலங்கை அணி 506/10 ரன்களை குவித்து அபார முன்னிலையை பெற்றது.

வங்கதேசம் இன்னிங்ஸ்:

அடுத்து வங்கதேசம் களமிறங்கியபோது பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது. இதனால், முதல் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் லிடன் தாஸ் (52), ஷகிப் அல் ஹசன் (58) இருவரும் சேர்ந்து ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், வங்தேச அணி 169/10 ரன்களை மட்டும் சேர்த்து, 29 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

3 ஓவர்களில்:

எளிய இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில் ஓபனர்கள் ஒசாக பெர்ணான்டோ 21 (9), கருணரத்னே 7 (9) இருவரும் சேர்ந்து, அணிக்கு மூன்று ஓவர்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். இதனால் இலங்கை அணி (29/0) 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்