ஆப்நகரம்

Ind vs Sl 2nd ODI: ‘டாஸ் வென்றது இலங்கை’ XI அணி இதுதான்...இந்திய வீரருக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை டாஸ் வென்றுள்ளது.

Samayam Tamil 20 Jul 2021, 2:42 pm
இந்தியா, இலங்கை இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டி துங்கியுள்ளது.
Samayam Tamil இந்தியா vs இலங்கை


இதில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்றப் பிறகு பேசிய இலங்கை கேப்டன் தஷுன் ஷனகா, “நாங்கள் பேட் செய்ய விரும்புகிறோம். கடந்த போட்டியைவிட இன்றைய போட்டியில் அதிக ரன்கள் குவிக்க அளவிற்கு மைதானம் ஒத்துழைக்கும் என நம்புகிறேன். உதனாவுக்கு பதிலாக கஷுன் ரஜிதா சேர்க்கப்பட்டுள்ளார்” எனக் கூறினார்.

அடுத்துப் பேசிய இந்திய அணிக் கேப்டன் ஷிகர் தவன், “கடந்த போட்டியில் 260 ரன்களுக்குள் இலங்கையை சுருக்கினோம். ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இப்போட்டியிலும் சிறப்பாக பந்துவீசுவார்கள் என நம்புகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப பேட் செய்ய நான் விரும்புகிறேன். எங்கள் அணியில் மாற்றங்கள் எதுவும் கிடையாது” எனத் தெரிவித்தார்.

இன்றைய போட்டியிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இஷான் கிஷன் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதால், இன்றைய போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய XI அணி: ஷிகர் தவன் (கேப்டன்), பிரித்வி ஷா, இஷான் கிஷன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, தீபக் சஹார், யுஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார்.

இலங்கை XI அணி: அவஷ்கா பெர்ணான்டோ, மினோட் பனுகா, பனுகா ராஜபக்ஷா, தனஞ்சயா டி சில்வா, சரித் அசலங்கா, தஷுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சமிகா கருனரத்னே, கஷுன் ரஜிதா, தஷ்மந்தா சமீரா, லக்ஷன் சண்டகன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்