ஆப்நகரம்

Ind vs SL 3rd T20: 2008-க்கு பிறகு முதல்முறை...இலங்கை அணி அபார வெற்றி: தொடரைக் கைப்பற்றியது!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி.

Samayam Tamil 30 Jul 2021, 7:06 am
இந்தியா, இலங்கை இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின், முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கும் இருக்கிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, படுமோசமாகச் சொதப்பியது.
Samayam Tamil இலங்கை அணி


இந்திய அணியில் ஓபனர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். தவன், சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் (9), சஞ்சு சாம்சன் (0), நிதிஷ் ராணா (6) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஓபனர் ருதுராஜும் 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்தவர்களும் சிறப்பாக சோபிக்கவில்லை. புவனேஷ்வர் குமார் (16), ராகுல் சஹார் (5), வருண் சக்ரவர்த்தி (0) படுசோமாக சொதப்பினர். குல்தீப் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 23 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 81/8 ரன்கள் மட்டும் சேர்த்தது.

வனிந்து ஹசரங்கா 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இலங்கை இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர்கள் அவிக்ஷா பெர்ணான்டோ (12), பனுகா (18) இருவரும் ராகுல் சஹாரின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்கள். அடுத்து சமரவிக்ரமாவும் (6) ராகுல் சஹாரின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் தனஞ்ஜெயா டி சில்வா (23), வனிந்து ஹசரங்கா (14) அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

இலங்கை அணி 14.3 ஓவர்களில் 82/3 ரன்கள் சேர்த்து, 2-1 என்ற கணக்கில் டி20 தொரைக் கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வனிந்து ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.

2008ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்