ஆப்நகரம்

ஐந்து பந்துகள் மட்டுமே நீடித்த ஆஸி.,: இந்திய அணி தடுமாற்றம்!

இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் வெறும் 5 பந்துகள் மட்டுமே நீடித்தது. 3 விக்கெட்டை இழந்த இந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

TOI Sports 24 Feb 2017, 12:14 pm
புனே: இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் வெறும் 5 பந்துகள் மட்டுமே நீடித்தது. 3 விக்கெட்டை இழந்த இந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
Samayam Tamil starc hazlewood strike three early blows
ஐந்து பந்துகள் மட்டுமே நீடித்த ஆஸி.,: இந்திய அணி தடுமாற்றம்!


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புனேயில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.

ஐந்து பந்துகள்:
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, மேலும் ஒரு பவுண்டரி சேர்த்த நிலையில் ஸ்டார்க் (61) அஷ்வின் சுழலில் சிக்கினார். இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் வெறும் 5 பந்துகள் நீடித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கோலி ஏமாற்றம்:
இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் (10) சொதப்பல் துவக்கம் அளித்தார். பின் வந்த புஜாரா (6) ஸ்டார்க் வேகத்தில் சரணடைந்தார். தொடந்து வந்த கேப்டன் கோலி ‘டக்’ அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்து 190 ரன்கள் பின் தங்கியுள்ளது. ராகுல் (45), ரகானே (6) அவுட்டாகாமல் உள்ளனர்.

Starc, Hazlewood strike three early blows

அடுத்த செய்தி

டிரெண்டிங்