ஆப்நகரம்

மனிதர்கள் தவறு செய்வது சகஜம் தான்... சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்தேன்: ஸ்டீவ் பக்னர்!

புதுடெல்லி: முன்னாள் அம்பயர் ஸ்டீவ் பக்னர் இரண்டு முறை இந்திய ஜாம்பவான் சச்சினுக்கு அவுட் வழங்கியதாக ஒப்புக்கொண்டார்.

Samayam Tamil 21 Jun 2020, 5:18 pm
முன்னாள் அம்பயரான ஸ்டீவ் பக்னர், இந்திய ஜாம்பவான் சச்சினுக்கு இரண்டு முறை தவறாக அவுட் வழங்கியதை தற்போது பகிர்ந்துள்ளார். மேலும் மனிதர்கள் தவறுகள் செய்வது மிகவும் சகஜமான ஒன்று தான் என்றும் பக்னர் தெரிவித்துள்ளார். கடந்த 2003 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபாவில் நடந்த போட்டியில் ஜேசன் கில்லெஸ்பி பந்தில், பக்னர் சச்சினுக்கு எம்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார்.
Samayam Tamil Sachin Tendulkar


தொடர்ந்து கடந்த 2005 இல் ஈடன் கார்டனில் நடந்த அப்துல் ரசாக் வீசிய பந்து சச்சினின் பேட்டில் பந்து படாமல் சென்றது. ஆனால் பக்னர் தவறாக அவுட் கொடுத்தார். தனது தவறான முடிவுகள் குறித்து பக்னர் கூறுகையில்,“சச்சினுக்கு இரண்டு தருணத்தில் நான் தவறாக அவுட் கொடுத்துவிட்டேன். எந்த ஒரு அம்பயரும் தெரிந்தே தவறான முடிவு வழங்க விரும்புவதில்லை. ஆனால் மனிதர்கள் தவறு செய்வது சகஜம்.

ஒரு முறை ஆஸ்திரேலியாவில் பந்து விக்கெட்டுக்கு மேலே சென்றது. இரண்டாவது முறை ஈடன் கார்டனில். பந்து சச்சினின் பேட்டில் படவில்லை. ஆனால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது உங்களுக்கு ஒன்றுமே கேட்காது. ஏன் என்றால் 100,000 ரசிகர்கள் கோஷமிடுவார்கள். தவறுகள் செய்வதும், தவறுகளை ஏற்றுக்கொள்வதுமே மனித வாழ்வின் ஒரு பகுதிதான்.

இது அம்பயரின் தன்னம்பிக்கைக்கு பாதகமாக இருக்குமா என சரியாக தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அம்பயரின் திறனை மேம்படுத்தும். தற்போது அம்பயரின் நிலை வெகுவாக மாறிவிட்டது. ஏன் என்றால் ஒருகாலத்தில் பேட்ஸ்மேன் லைனுக்கு வெளியே விளையாடும் போது அவர் அவுட் இல்லை என தெரிவித்து வந்தோம். ஆனால் தற்போதைய தொழில்நுட்பம் பந்து விக்கெட்டில் (ஸ்டெம்பில்) படும் என தெரிவிக்கும் போது முடிவை மாற்றி அவுட் வழங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தொழில் நுட்பத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்