ஆப்நகரம்

ரன் மிஷினுக்குப் பிறந்தநாள்: இதோ வித்தியாசமான வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 29வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கி வாழ்த்தியுள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

TNN 5 Nov 2017, 9:32 am
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 29வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவத்தை மணல் சிற்பமாக உருவாக்கி வாழ்த்தியுள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
Samayam Tamil sudarsan pattnaiks sandart wishing virat kohli on his 29th birthday
ரன் மிஷினுக்குப் பிறந்தநாள்: இதோ வித்தியாசமான வாழ்த்து


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா விதமான போட்டிகளிலும் ரன் குவித்து ரன் மிஷின் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். சச்சின் சாதனையை ஒவ்வொன்றாக முறியடித்து வரும் அவர் இன்று தனது 29வது பிறந்நாளைக் கொண்டாடுகிறார். ஒருநாள் போட்டிகளில் 32 சதம் விளாசியுள்ள அவர் 29 வயதுக்குள் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

கோலியின் பிறந்தநாளில் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கோலியில் உருவத்தை மணல் சிற்பமாக வடித்து 'ஹேப்பி பர்த் டே' என்று வாழ்த்தியுள்ளார். #HappyBirthdayVirat : Very warm birthday greetings to you @imVkohli; God bless you. One of my SandArts. pic.twitter.com/vb6yN27alN — Sudarsan Pattnaik (@sudarsansand) November 5, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்