மும்பை: இந்த முறை 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லும் அணியை இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கணித்துள்ளார். ஆனால் இவரின் கணிப்பு இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் வரும் மே 30ல் துவங்கி ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.
தீவிர சோதனை:
இந்நிலையில் இந்தியா உட்பட அனைத்து கிரிக்கெட் அணிகளுமே, 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை வெல்ல படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தவிர, தங்களின் விளையாடும் சிறந்த லெவன் அணியை சோதனை முறையில் தயார் செய்து வருகின்றனர்.
கோப்பை யாருக்கு?
இந்நிலையில் இம்முறை உலகக்கோப்பை வெல்லும் அணியை இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கணித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘உலகக்கோப்பை வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது, 2011ல் தொடரை நடத்திய இந்திய அணியும், 2015ல் தொடரை நடத்திய ஆஸ்திரேலிய அணியும் கோப்பை வென்றது.
அதே போல இந்த முறை, இங்கிலாந்தில் தொடர் நடப்பதால், அந்த அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.’ என்றார்.
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.
இந்நிலையில் இந்தியா உட்பட அனைத்து கிரிக்கெட் அணிகளுமே, 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை வெல்ல படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தவிர, தங்களின் விளையாடும் சிறந்த லெவன் அணியை சோதனை முறையில் தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இம்முறை உலகக்கோப்பை வெல்லும் அணியை இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கணித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘உலகக்கோப்பை வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்கும் போது, 2011ல் தொடரை நடத்திய இந்திய அணியும், 2015ல் தொடரை நடத்திய ஆஸ்திரேலிய அணியும் கோப்பை வென்றது.