ஆப்நகரம்

T20 World Cup 2021: இதுக்காக தான் அஸ்வின சேத்தாங்களா? வித்தியாசமான காரணத்தை கூறும் கவாஸ்கர்!

டி20 உலகக் கோப்பையில் அஸ்வின் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்து கவாஸ்கர் பேசியுள்ளார்.

Samayam Tamil 11 Sep 2021, 10:32 am
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
Samayam Tamil ரவிச்சந்திரன் அஸ்வின்


இந்திய அணி அறிவிப்பு:

இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கான, வேலைகளையும் பிசிசிஐ தீவிரமாகச் செய்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு அணியை அறிவித்தது.

T20 World Cup 2021: இந்திய அணி அறிவிப்பு...தோனிக்கு முக்கிய பதவி: 2 தமிழக வீரர்களுக்கு இடம்!

அஸ்வினுக்கு இடம்:

இந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்திய டி20 அணிக்காக விளையாடவில்லை. இருப்பினும், இவர் பெயர் இடம்பெற்றிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அமீரக மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்ற காரணத்தினால்தான், சேர்க்கப்பட்டிருப்பார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவாஸ்கர் பேட்டி:

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், அஸ்வினை சேர்த்ததற்கான காரணம் குறித்துப் பேசியுள்ளார். “அஸ்வினுக்கு இந்திய டி20 அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சிதான். ஆனால், அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா எனக் கேட்டால், அதற்கு வாய்ப்பு குறைவுதான். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.

‘நல்லா கேவலப்படுத்திட்டீங்க’ மறக்க மாட்டேன்…உழைப்புக்கு இதுதான் பரிசா? கண்ணீர்விட்ட வீரர்!

மேலும் பேசிய கவாஸ்கர், “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், அவரை ஆறுதல் படுத்தத்தான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கும் என நினைக்கிறேன்” என கவாஸ்கர் கூறினார்.

மகேந்திரசிங் தோனி ஆலோசகராக சேர்க்கப்பட்டது குறித்துப் பேசிய கவாஸ்கர், “தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கிறது. இவர் ஆலோசகராக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியா இம்முறை கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்