ஆப்நகரம்

‘19/3’...திணறிய அணி: அடுத்து வந்த ரெய்னா காட்டடி...அபார ஆட்டம்: டெக்கான் அணி ரன் குவிப்பு!

ரெய்னா அதிரடியாக விளையாடியதால், டெக்கான் அணி ரன்களை குவித்தது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 26 Nov 2022, 6:50 pm
டி10 லீக் தொடர் தற்போது அமீரகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil சுரேஷ் ரெய்னா


இந்த டி10 லீக் தொடரின் 9ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ், நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெக்கான் அணி இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியில் ஓபனர் ஜேசன் ராய் 5 (9), காட்மோர் 0 (1) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து கேப்டன் நிகோலஸ் பூரனும் 7 (3) படுமோசமாக சொதப்பினார்.

இதனால், டெக்கான் அணி 19/3 எனத் திணறியது. இதனைத் தொடர்ந்த சுரேஷ் ரெய்னா அபாரமாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். மொத்தம் 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் அதில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 28 ரன்களை சேர்த்து அசத்தினார்.

தொடர்ந்து டேவிட் வீஸ் 15 (8), ஓடியன் ஸ்மித் 38 (19) ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். ஆண்ட்ரே ரஸல் கோல்டன் டக் ஆனார்.

இறுதியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 10 ஓவர்களில் 109/7 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து நியூயார்க் அணி களமிறங்க உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்