ஆப்நகரம்

T20 World Cup 2022: ‘பும்ரா’..பங்கேற்பாரா, மாட்டாரா? இறுதி முடிவை அறிவித்தது பிசிசிஐ..அறிக்கை வெளியீடு!

டி20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா பங்கேற்பாரா, மாட்டாரா என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 3 Oct 2022, 8:31 pm
இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
Samayam Tamil இந்திய அணி


இம்மாதம் 23ஆம் தேதிமுதல் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க முடிவு செய்தது.

குறை கண்டுபிடிப்பு:

இந்த இரண்டு சுற்றுப் பயணங்கள் மூலம் இந்திய அணியின் மிகப்பெரிய குறை வெளிப்பட்டுள்ளது. ஆம், ஆஸ்திரேலிய டி20 தொடரின்போது இந்திய அணி 208 ரன்ளை குவித்தபோதும் பௌலர்களின் சொதப்பல் காரணமாக இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்தியா 236 ரன்கள் குவித்தும், பௌலர்களின் சொதப்பல் காரணமாக வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. இப்படி இரண்டு தொடர்களிலும் இந்தியா சேஸிங்கின்போது சொதப்புவதற்கு காரணம் டெத் பௌலிங்தான்.

மெய்ண் பௌலர்கள் சொதப்பல்:

பும்ரா காயம் காரணமாக ரெஸ்டில் இருந்ததால், இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பி வருகிறது. டெத் ஓவர்களின் ஸ்பெஷலிஸ்ட்கள் அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார் ஆகியோரும் டெத் ஓவர்களல் படுமோசமாக சொதப்பி வருகிறார்கள் இதனால், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சேஸிங்கின்போது தோல்விகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

பும்ரா விலகல்:

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த ராகுல் டிராவிட், பும்ராவுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது, டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது எனக் கூறியிருந்தார். இதனால், பும்ரா உலகக் கோப்பையில் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ‘‘காயம் காரணமாக, பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிவிட்டார். மாற்று வீரரை விரைவில் அறிவிப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்