ஆப்நகரம்

கிரிக்கெட் மூலம் தமிழக போராட்டத்தை முன் எடுத்துச் செல்ல திட்டம்

சென்னை : தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் இந்தியா முழுவதும் தெரியப்படுத்த, இன்று நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளில் பதாகைகள் பயன்படுத்துமாறு சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

TOI Contributor 17 Sep 2017, 8:48 am
சென்னை : தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் இந்தியா முழுவதும் தெரியப்படுத்த, இன்று நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளில் பதாகைகள் பயன்படுத்துமாறு சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
Samayam Tamil tamil nadu protest banners using in india vs australia 1st odi match
கிரிக்கெட் மூலம் தமிழக போராட்டத்தை முன் எடுத்துச் செல்ல திட்டம்


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற உள்ளது.

தமிழகத்தில் தொடர்கதையாகி விட்டது போராட்டங்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி நீர் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் செய்தும் அதை இந்திய அளவில் கண்டு கொள்வதாக தெரியவில்லை.



இன்று சென்னையில் நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி மூலம் தமிழக போராட்டங்களை உலகிற்கு எடுத்துச்செல்வோம் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது.

இதன் மூலம் தமிழத்தில் இப்படி எல்லாம் போராட்டம் நடைப்பெறுகின்றது என உலகம் அறியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்