ஆப்நகரம்

எனக்கா... இந்த விருதா... சும்மா பொய் சொல்லாதீங்க... கடைசி வரை நம்பாத கோலி!

சில மோசமான சம்பவங்களுக்காக தனது பெயர் அடிபட்ட காரணத்தால் விளையாட்டு உணர்வுடன் செயல்பட்ட வீரருக்கான விருதில் தனது பெயர் இடம் பெற்றதை நம்பமுடியவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Jan 2020, 5:20 pm
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐசிசி., விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வரிசையில் 2019ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதும், உலகக்கோப்பை தொடரின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான தருணத்துக்கான விருது வழங்கப்பட்டது.
Samayam Tamil Virat Kohli


மோசமான சம்பவங்கள்
ஆனால் சில மோசமான சம்பவங்களில் தனது பெயர் அடிபட்ட காரணத்தால் இந்த விருது தனக்கு வழங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த 2019இல் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை காலத்துக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னரை ரசிகர்கள் மோசமான நடத்தினர்.

கோலி ஆதரவு
இதைப்பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரசிகர்களை நோக்கி கையை தூக்கி அவரை காயப்படுத்துவதற்கு பதிலாக ஆதரவளிக்கும் படி கேட்டுக்கொண்டார். இதற்காக இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலிக்கு ஐசிசி இந்த விருதை வழங்கியுள்ளது. இவ்விருது குறித்து கோலி கூறுகையில், “எனக்கு இவ்விருது கிடைத்தது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் சிஒல மோசமான சம்பவங்களுக்காக எனது பெயர் அடிபட்டது.


தப்பு கணக்கு
சில நேரத்தில் அனைவரையும் நாம் தவறாக ஒரே மாதிரியாக கணித்துவிடுகிறோம். அதனால் இளம் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அனைவருக்கும் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள நேரம் கொடுக்க வேண்டும். ஸ்மித் விஷயத்தில் அவரின் நிலைமையை என்னால் உணர முடிந்தது. அவர் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர நாம் தான் உதவ வேண்டும்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்