ஆப்நகரம்

சூப்பரா துவங்கி சொங்கி மாதிரி முடித்த வங்கதேசம்....: இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு!

ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், வங்கதேச அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.

Samayam Tamil 7 Nov 2019, 8:54 pm
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி, ராஜ் கோட்டில் இன்று நடக்கிறது.
Samayam Tamil Chahal


இரண்டாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

நல்ல துவக்கம்
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிடன் தாஸ் (29), நையீம் (36) நல்ல துவக்கம் அளித்தனர். அடுத்துவந்த முஸ்பிகுர் ரஹீம் (4) வந்த வேகத்தில் வெளியேறினார். அபிப் (6) ஏமாற்றினார்.


சர்கார் அதிரடி

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுமியா சர்கார் அதிரடியாக 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த மகமதுல்லா கடைசி நேரத்தில் அதிரடி காட்ட, வங்கதேச அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சகால், 2 விக்கெட் சாய்த்தார். கலீல் அஹமது, தீபக் சகார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்