கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர் . இருந்தாலும் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் பிஸியாக உரையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய்ட கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, கெவின் பீட்டர்சன், ஷமி, டேவிட் வார்னர் ஆகியோருடன் நேரலையில் பேசினார்.
பல விஷயங்கள்
இந்த உரையாடலின் போது ஷிகர் தவனுடனான் ஓப்பனிங், உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ரோஹித் பேசினார். இந்நிலையில் தான் ஓய்வு பெறும் வயது குறித்தும் இந்த உரையாடலின் போது ரோஹித் பேசினார். தற்போது 33 வயதாகும் ரோஹித் சர்மா இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வார்னருடன் பேசிய ரோஹித் சர்மா கூறுகையில், “நாங்கள் இந்தியாவில் வளரும் போது, கிரிக்கெட்டை தான் வாழ்க்கையாக நினைத்து வளர்ந்தோம். ஆனால் 38-39 வயதான பின் கிரிக்கெட் முடிந்த பிறகும் வாழ்க்கை உள்ளது. எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என தெரியவில்லை இருந்தாலும் அதற்கு முன்பாக ஓய்வு பெறுவேன் என நினைக்கிறேன்” என்றார்.
இலங்கையை தொடர்ந்து ஐபிஎல்லை நடத்த முன்வந்துள்ள யு.ஏ.இ!
கடந்த 2007இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமானார் ரோஹித் சர்மா. தொடர்ந்து 2007 இல் நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் இடம் பிடித்தார். ஆனால் அதற்கு பின் மோசமான பார்ம் காரணமாக ரோஹித்துக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு கடந்த 2013 இல் தவனுடன் துவக்க வீரராக ரோஹித் களமிறங்கிய பின் தான் அவருக்கு கிரிக்கெட் வாழ்வில் ஏறுமுகமாக அமைந்தது. அதன் பின் ரோஹித் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக தற்போது வரை உள்ளார்.
ஓய்வில் இருந்து மீண்டு வர ரெடி... ஆல் ரவுண்டர் இர்பான் பதான்!
பல விஷயங்கள்
இந்த உரையாடலின் போது ஷிகர் தவனுடனான் ஓப்பனிங், உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ரோஹித் பேசினார். இந்நிலையில் தான் ஓய்வு பெறும் வயது குறித்தும் இந்த உரையாடலின் போது ரோஹித் பேசினார். தற்போது 33 வயதாகும் ரோஹித் சர்மா இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வார்னருடன் பேசிய ரோஹித் சர்மா கூறுகையில், “நாங்கள் இந்தியாவில் வளரும் போது, கிரிக்கெட்டை தான் வாழ்க்கையாக நினைத்து வளர்ந்தோம். ஆனால் 38-39 வயதான பின் கிரிக்கெட் முடிந்த பிறகும் வாழ்க்கை உள்ளது. எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என தெரியவில்லை இருந்தாலும் அதற்கு முன்பாக ஓய்வு பெறுவேன் என நினைக்கிறேன்” என்றார்.
இலங்கையை தொடர்ந்து ஐபிஎல்லை நடத்த முன்வந்துள்ள யு.ஏ.இ!
கடந்த 2007இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமானார் ரோஹித் சர்மா. தொடர்ந்து 2007 இல் நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் இடம் பிடித்தார். ஆனால் அதற்கு பின் மோசமான பார்ம் காரணமாக ரோஹித்துக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு கடந்த 2013 இல் தவனுடன் துவக்க வீரராக ரோஹித் களமிறங்கிய பின் தான் அவருக்கு கிரிக்கெட் வாழ்வில் ஏறுமுகமாக அமைந்தது. அதன் பின் ரோஹித் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக தற்போது வரை உள்ளார்.
ஓய்வில் இருந்து மீண்டு வர ரெடி... ஆல் ரவுண்டர் இர்பான் பதான்!