ஆப்நகரம்

ஆக்லாந்தில் தரையிறங்கிய இந்திய அணி... போட்டோ வெளியிட்ட ‘கிங்’ கோலி!

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்தனர்.

Samayam Tamil 21 Jan 2020, 7:38 pm
சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக நியூசிலாந்து செல்கிறது. அங்கு நியூசிலாந்துக்கு எதிராக, 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் வரும் 24ஆம் தேதி துவங்குகிறது.
Samayam Tamil Virat Kohli


தரையிறங்கிய இந்திய அணி
இதில் பங்கேற்கும் கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்தனர். ஆக்லாந்தில் தரையிறங்கிய போட்டோவை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக கோலி வெளியிட்டுள்ள பதிவி ல், “ஆக்லாந்தில் தரையிறங்கியாச்சு. இனி கிளம்ப வேண்டி தான்” என குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram Ready for New Zealand A post shared by Rohit Sharma (@rohitsharma45) on Jan 20, 2020 at 8:23am PST

ரோஹித்தும்
இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆக்லாந்து புறப்படும் முன் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தங்களின் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயணத்தை இலங்கை அணிக்கு எதிராக வெற்றியுடன் துவங்கியுள்ளது.

View this post on Instagram Touchdown Auckland. Let’s go 🇮🇳 @shardul_thakur @shreyas41 A post shared by Virat Kohli (@virat.kohli) on Jan 21, 2020 at 4:28am PST

அனுபவம்

நியூசிலாந்து தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றதில் இருந்து பல அனுபவங்களை கற்றுக்கொண்டோம். ஆனால் இந்திய அணி வீரர்கள் விளையாடிய விதத்தில் இருந்து பல நல்ல விஷயங்கள் கிடைத்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் நல்ல பார்மில் உள்ளனர்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்