ஆப்நகரம்

‘டி20 உலகக் கோப்பை தோல்வி எதிரொலி’…அணியில் இருந்து ஒருவரை நீக்கியது பிசிசிஐ…முதல் விக்கெட்!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்லாத காரணத்தினால், ஒருவரை பிசிசிஐ நீக்கியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 27 Nov 2022, 7:34 am
டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் இந்திய அணி அரையிறுதிவரை முன்னேறி தோற்றது.
Samayam Tamil இந்திய அணி


இந்திய அணி 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றப் பிறகு, அடுத்து ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. விராட் கோலி தலைமையில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டும், ஐசிசி தொடர்களில் அழுத்தங்களுடன் விளையாடி கோப்பையை வெல்ல முடியாமல் திணறியது.

பேடி ஆப்டன்:

இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகும் இதே நிலைதான் தொடர்ந்துது. இருதரப்பு தொடர்களில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை பெற்றது. இருப்பினும், ஆசியக் கோப்பை 2022 தொடரில் அழுத்தங்களுடன் விளையாடி பைனலுக்கு கூட முன்னேறவில்லை. இதனால், சுதாரித்துக்கொண்ட பிசிசிஐ டி20 உலகக் கோப்பை தொடருக்கு பேடி ஆப்டனை அணியின் ஆலோசகராக நியமித்து, வீரர்கள் எக்காரணம் கொண்டும் அழுத்தங்களுடன் விளையாடக் கூடாது என ஆப்டனுக்கு உத்தரவும் போட்டது.

2011-ல்:

2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின்போது பேடி ஆப்டன், இந்திய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்தார். 2008 முதல் 2011 வரை இந்த பணியை இவர் செய்து வந்தார். இவரது பணியில் திருப்தி இருந்ததால், மீண்டும் ஆலோசகர் பணிக்காக அழைக்கப்பட்டார்.

அழுத்தங்களுடன்தான் விளையாடினர்:

அதன்படி, டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால், அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக துவக்கத்தில் இருந்தே அழுத்தங்களுடன் செயல்பட்டு சொதப்பியது. இறுதியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இதனால், பேடி ஆப்டன் மீது அதிருப்தியடைந்துள்ள இந்திய அணி நிர்வாகம் அவரை கழற்றிவிட முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் சில சீனியர் இந்திய வீரர்களை இந்திய டி20 அணியில் இருந்து கழற்றிவிட்டு, இளம் வீரர்கள் கொண்ட அணியை கட்டமைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் போன்றவர்களுக்கு இனி ரெகுலராக வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்