ஆப்நகரம்

Team India: வீரர்களை தொடர்ந்து இந்திய அணி தேர்வாளர்களுக்கு கோடிகளில் சம்பள உயர்வு

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 10 Aug 2018, 9:14 pm
மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளன.
Samayam Tamil team-india


உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி பிசிசிஐ நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள், இந்திய அணி தேர்வாளர்களின் சம்பள உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் மற்ற கிரிக்கெட் அணிகளை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணி மிக அதிக வருவாய் ஈட்டி வருகின்றது. இந்நிலையில் இந்திய வீரர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சம்பளம் அதற்கேற்றார் போல் வழங்கப்பட்டு வருகின்றது.

வீரர்களை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வாளர்களுக்கு சம்பள உயர்வு கோடிகளை தொட்டுள்ளது.

தலைமை அணி தேர்வாளர் கிரண் மோர், ஒரு ஆண்டுக்கு தான் வாங்கிக் கொண்டிருந்த ரூ. 80 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி சம்பள உயர்வு பெற்றுள்ளார்.

மற்ற அணி தேர்வாளர் உறுப்பினர்கள் ரூ. 60 லட்சத்திலிருந்து ரூ. 90 லட்சம் சம்பளம் பெற உள்ளனர்.


பெண்கள் அணி தேர்வாளர் உறுப்பினர்களுக்கு ரூ 25 லட்சத்திலிருந்து, ரூ. 30 லட்சம் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்