ஆப்நகரம்

கேர்ள் பிரண்ட் உடன் புத்தாண்டை கொண்டாடிய ரிஷப் பந்த்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் புத்தாண்டை தனது கேர்ள் பிரண்ட் இஷா நேகியுடன் கொண்டாடியுள்ளார்.

Samayam Tamil 3 Jan 2020, 12:42 pm
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு தங்களின் குடும்பத்தாருடன் சென்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் துவங்குவதற்கு முன்பாக தங்களுக்கி கிடைத்த விடுமுறையை சொந்தங்களுடன் கொண்டாடிய இந்திய வீரர்கள், இலங்கை அணிக்கு எதிராக நாளை மறுநாள் துவங்கவுள்ள தொடரில் பங்கேற்கின்றனர்.
Samayam Tamil Rishabh Pant


பாண்டியா நிச்சயம்
ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, செர்பிய நடிகை நடாஷாவின் நிச்சயம் புத்தாண்டு தினத்தில் நடந்தது. இந்நிலையில் இளம் ரிஷப் பந்த் புத்தாண்டை தனது கேர்ள் பிரண்ட் இஷா நேகியுடன் கொண்டாடியுள்ளார். இந்த போட்டோவை சமூக வலைதளத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

தோனியுடன் கொண்டாட்டம்
முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னாள் கேப்டன் தோனியுடன் ரிஷப் பந்த் கொண்டாடினார். இதற்கிடையில் தோனியின் இடத்தை பிடித்த ரிஷப் பந்த் சர்வதேச கிரிக்கெட்டில் சரியாக செயல்படாத காரணத்தால் வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் போது ரசிகர்கள் தோனியின் பெயரை கோஷமிட்டனர்.

View this post on Instagram I like me better when I’m with you 🧡🤷🏻‍♂ A post shared by Rishabh Pant (@rishabpant) on Jan 2, 2020 at 10:52am PST

கோலி ஆதரவு
இதையடுத்து இந்திய ரசிகர்கள் இப்படி ரிஷப் பந்த்தை ஊக்குவிப்பதற்கு பதிலாக தோனியின் பெயரை கோஷமிடுவது சரியில்லை என கேப்டன் கோலி ஆதரவாக பேசினார். இதேபோல இந்திய பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோரும் பந்த்துக்கு ஆதரவாக பேசினார். இவரில் செய்லபாடு இலங்கை அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்