ஆப்நகரம்

எம்.பி.சம்பளம் முழுவதையும் ஏழை மக்களுக்கு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்!!

ராஜ்ய சபை உறுப்பினரான இருந்த சச்சின் டெண்டுல்கரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதற்கான சம்பளம் முழுவதையும் பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

Samayam Tamil 1 Apr 2018, 5:33 pm
மும்பை: ராஜ்ய சபை உறுப்பினராக இருந்த சச்சின் டெண்டுல்கர், பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதற்கான சம்பளம் முழுவதையும் பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
Samayam Tamil எம்.பி.சம்பளம் முழுவதையும் ஏழை மக்களுக்கு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்!!
எம்.பி.சம்பளம் முழுவதையும் ஏழை மக்களுக்கு கொடுத்த சச்சின் டெண்டுல்கர்!!


இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் ராஜ்ய சபையில் கௌரவ உறுப்பினராக இருந்தார். அப்போது, அவர் முறையாக பாராளுமன்றத்திற்கு வரவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அது ஒருபுறம் இருந்தபோதும், பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து சுமார் 7.4 கோடி ரூபாய் செலவு செய்து, 20 பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தினார். இதுமட்டுமில்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உதவினார். அந்த நிதியின் மூலம், இரண்டு கிராமங்களையும் தத்தெடுத்தார்.

இந்நிலையில், சச்சினின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அவருக்கு சம்பளம் மற்றும் இதர உதவித்தொகைகள் சேர்த்து சுமார் 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்த மொத்த பணத்தையும், ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தானமாக சச்சின் வழங்கியுள்ளார்.

அவரின் இந்த செயலைப் பாராட்டி, பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் விளையாட்டுத் துறையில் மட்டுமில்லாமல், மாணவர்களின் கல்வி, குழந்தைகளின் மேம்பாடு என பல முன்னேற்ற பணிகளுக்கு நிதி வழங்கி வருவது அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்