ஆப்நகரம்

புஜாரா சதத்தை தடுத்த தெரு நாய்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய வீரர் புஜாராவின் சதத்தை தெரு நாய் தடுத்தது.

TOI Sports 17 Nov 2016, 2:29 pm
விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய வீரர் புஜாராவின் சதத்தை தெரு நாய் தடுத்தது.
Samayam Tamil the dog has forced an early tea
புஜாரா சதத்தை தடுத்த தெரு நாய்!


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ராகுல் ‘டக் அவுட்டானார் ’. முரளி விஜய் (20) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

இதன்பின் ஜோடி சேர்ந்த புஜாரா, கேப்டன் கோலி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது. சீரான இடைவேளையில் பவுண்டரி அடித்த இருவரும், அரைசதம் கடந்தனர். இந்திய வீரர் புஜாரா 97 ரன்கள் எடுத்த போது, மைதானத்துக்குள், திடீரென தெரு நாய் புகுந்தது.

மைதானத்தை சுற்றிசுற்றி வந்த இந்த நாயை, மைதான பராமரிப்பாளர்கள் ஒருவழியாக விரட்டினர். முதலில் மைதானத்தை விட்டு வெளியேறி இவர்களுக்கு போக்கு காட்டிய நாய், மீண்டும் மைதானத்துக்குள் புகுந்தது. இதனால் வேறு வழியில்லாமல், வீரர்கள் தேநீர் இடைவேளைக்கு சென்றனர். இதனால் புஜாராவின் சதம் சிறிது நேரம் தாமதமானது.

முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (97), கோலி (91) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்