ஆப்நகரம்

என் பலிகடா இவங்க தான்... திட்டமிட்டு பேட்டிங் புரமோஷன் வாங்கிய ஹர்திக் பாண்டியா

நான் சிக்ஸர் அடிக்க ஏதுவாக சில பவுலர்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

TOI Sports 26 Sep 2017, 1:10 am
நான் சிக்ஸர் அடிக்க ஏதுவாக சில பவுலர்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil the plan was to target the spinner hardik pandya
என் பலிகடா இவங்க தான்... திட்டமிட்டு பேட்டிங் புரமோஷன் வாங்கிய ஹர்திக் பாண்டியா


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளையும் இந்தியா 3-0 என வென்று அசத்தியுள்ளது.

கடைசியாக நடந்த 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4வது வீரராக பிரமோஷன் அடைந்து தன் அதிரடியை காட்டினார்.

சாஸ்திரியின் திட்டம் :
இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணியின் 4வது வீரரை களமிறக்குவதில் பிரச்னை உள்ளது. மணீஸ் பாண்டே, கே எல் ராகுல் அல்லது ஜாதவ் களமிறக்கி பார்த்து அது சரிபட்டு வராததால், அந்த இடத்திற்கு ஹர்திக் பாண்டியாவை களமிறக்கி சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளார். அதற்கு கோலியும், தோனியும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அப்படி பேட்டிங் புரமோஷனாக 4வது இடத்தில் களமிறங்குவதால், உன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிவிடாதே. நீ எப்போதும் போல உன் விருப்பப் படி ஆடலாம். நம் இலக்கு வெற்றிக்கு 294 என கூறி அனுப்பப்பட்டாராம்.

பாண்டியாவின் திட்டம் :
என்னால் எளிதாக, கட்சிதமாக சிக்ஸர் அடிக்க முடியும் என நம்புவது ஸ்பின்னர்களை தான். அதனால் சென்னை போட்டியில் ஜம்பாவும், இந்தூர் போட்டியில் அஸ்டோன் அகரும் சிக்கினர்.

ரஹானே, ரோகித் சர்மா 23.3 ஓவரில் 147 ரன்கள் சேர்த்திருந்த நேரத்தில், ஸ்பின்னர்கள் பவுலிங் செய்யும் நேரமாக அமைந்தது. அதனால் எனக்கு சற்று வசதியாக அமைந்தது. என் விருப்பப்படி சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சித்தேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்