ஆப்நகரம்

பாண்டியா போல பவுலர் வேணும் : வில்லியம்சன்!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் தோல்விக்கு நியூசிலாந்து வீரர்களின் தவறுதான் காரணம் என நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

TOI Sports 17 Oct 2016, 1:46 pm
தரம்சாலா: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் தோல்விக்கு நியூசிலாந்து வீரர்களின் தவறுதான் காரணம் என நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil they bowled quite well we made some mistakes kane williamson
பாண்டியா போல பவுலர் வேணும் : வில்லியம்சன்!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி தரம் சாலாவில் நடந்தது. இத்தொடரில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, அமித் மிர்சா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட
இவர்கள் நியூசிலாந்து அணியை ஒருகைப்பார்த்தனர். அறிமுக வீரர் பாண்டியா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தல் ஆரம்பத்துக்கு வித்திட்டார். சுழலில் மிரட்டிய அமித் மிஸ்ரா, ஒருநால் அரங்கில் அதிவேகமாக 50 விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியது:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். நியூசிலாந்து அணியின் வீரர்களின் சிறு சிறு தவறு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்து பவுலர்களும் சிறப்பான முறையில் பந்துவீசினர். ஆனால் பாண்டியா வீசியது போல 130-140 கி.மீ., வோகத்தில் பந்துவீச நிச்சயம் ஒரு பவுலர் நியூசிலாந்து அணிக்கு தேவை.
இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்