ஆப்நகரம்

‘தியாக செம்மலாக மாறிய’…ரோஹித் ஷர்மா: இந்தியா 300+ ரன்களை அடிக்க...முக்கிய காரணமே ரோஹித்தின் தியாகம்தான்!

இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா, தியாக செம்மலாக மாறியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 22 Jan 2023, 6:58 am
இந்திய அணி 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு உலகக் கோப்பையை கூட கைப்பற்றியது கிடையாது. இந்த வருடம், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
Samayam Tamil ரோஹித் ஷர்மா


2011ஆம் ஆண்டில், இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாதான் வென்றது. அடுத்து, 2016-ல் ஆஸியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸிதான் வென்றது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இங்கிலாந்துதான் வென்றது.

தற்போது, 2023ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதனால், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாதான் கோப்பை வெல்லும் எனக் கருதப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்தும் வகையில், இந்திய அணி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, வெற்றிகளை குவித்து வருகிறது.

முதலில் களமிறங்கினால் 300+ ரன்களை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள இந்திய அணி, ஒருவேளை முதலில் பந்துவீசினால் எதிரணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அபார வெற்றியைப்பெற்றுவிடுகிறது. ஆகையால், இம்முறை இந்திய அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியாக செம்மல் ரோஹித்:

முதலில் களமிறங்கும் இந்திய அணி 300+ ரன்களை குவிக்க முக்கிய காரணமாக ரோஹித் ஷர்மாதான். ஆம், ரோஹித் ஷர்மாவுடன் ஓபனராக களமிறங்கும் ஷுப்மன் கில் துவக்கத்தில் அதிக பந்துகளை எதிர்கொண்டு, செட்டில் ஆனப் பிறகுதான் ரன்களை அடிக்க ஆரம்பிக்கிறார். இதனால், பவர் பிளேவில் பந்துகள் சிறப்பாக ஸ்விங் ஆகும் நேரத்திலும்கூட ரோஹித் ஷர்மா ரிஸ்க் எடுத்து, அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

20 ஓவர்களில்:


ரோஹித் ஷர்மா இப்படி ரிஸ்க் எடுத்து அதிரடி காட்டும் அதேவேளையில், ஷுப்மன் கில் செட்டில் ஆகிவிட்டு, அதன்பிறகு அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பிக்கிறார். இந்த திட்டத்தால், இந்திய அணி 20 ஓவர்களிலேயே 100+ ரன்களை கடந்துவிடுகிறது. ஷுப்மன் கில்லும் செட்டில் ஆனப் பிறகு, அதிரடி காட்டுகிறார். அடுத்து கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹார்திக் பாண்டியா போன்ற பார்மில் இருக்கும் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

சுயநலமில்லாத கேப்டன்:

ரோஹித் ஷர்மா, தான் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அவுட் ஆனாலும் பரவாயில்லை எனக் கருதி அணிக்காக ரிஸ்க் எடுத்து, துவக்கத்திலேயே அதிரடி காட்டுவதுதான், இந்திய அணிக்கு பலம். இவர் முன்பு இப்படி கிடையாது. செட்டில் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால், கேப்டன் பொறுப்பை ஏற்றப் பிறகு அணியின் நலன் கருதி, துவக்கத்தில் இருந்தே ரிஸ்க் எடுத்து அதிரடி காட்டி வருகிறார். இப்படி, வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்ட முற்பட்டு, தொடர்ந்து சொற்ப ரன்களை மட்டும் அடித்தால், கேப்டன் பதவியே பறிபோய்விடும். ஆனாலும், ரோஹித் அப்படி விளையாடுவதுதான் அவரது மதிப்பை கூட்டுகிறது.

இனியும், இதேபோல் ரோஹித் விளையாடும் பட்சத்தில் இந்திய அணி தொடர்ந்து 300+ ரன்களை அசால்ட்டாக குவித்து, தொடர் வெற்றிநடையைப் போடும் என்பதுதான் உண்மை.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்