ஆப்நகரம்

இப்பிடி ஒரு மோசமான நாளாக அமையும் என எதிர்பார்க்கல... விராட் கோலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், விரைவாக விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

Samayam Tamil 15 Jul 2018, 1:07 pm
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், விரைவாக விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
Samayam Tamil 7


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நடந்தது.

இதில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதற்கு இந்திய அணி விரைவாக விக்கெட் இழந்ததே, இந்திய அணியின் தோல்விக்கு முக்கியம் காரணம் என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ‘ முதலில் பேட்டிங் நன்றாக சென்றது. அதே நேரம் விக்கெட்டும் முன்னதாக சரிய தொடங்கியது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

இன்று இப்பிடி ஒரு மோசமான நாளாக அமைந்தது. இங்கிலாந்து பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். விரைவாக விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது” என்றார்.

India conceded 20-25 runs extra in the death overs, says Yuzvendra Chahal after England beat India to level the three-match one-day international series.

அடுத்த செய்தி

டிரெண்டிங்