ஆப்நகரம்

TNPL 2019: மதுரைக்கு 125 ரன் இலக்கை நிர்ணயித்த தூத்துக்குடி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது.

Samayam Tamil 20 Jul 2019, 9:25 pm
திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி அசத்தலாக பேட்டிங் செய்து வருகின்றது.
Samayam Tamil SMPvsTP


தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெறுகிறது.

இன்று நடைப்பெறும் ஆட்டத்தில் தூத்துக்குடி - மதுரை அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகின்றது.
பவர்பிளே 6 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 39/1 ரன்கள் எடுத்துள்ளது.

10 ஓவர் முடிவில் 81 ரன்களை குவித்துள்ள தூத்துக்குடி அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
18 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 118 ரன்னுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கிறது.

20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
தூத்துக்குடி அணி சார்பாக தொடக்க வீரர் அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் 55, கேப்டன் சுப்பரமணிய சிவா 28 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்