ஆப்நகரம்

TNPL 2019: கோவை அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த காஞ்சி வீரன் அணி

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 போட்டி தொடரின் 4வது போட்டியில் கோவை கிங்ஸ் அணி காஞ்சி கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகின்றன.

Samayam Tamil 21 Jul 2019, 9:02 pm
திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 போட்டி தொடரின் 4வது போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் காஞ்சி கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
Samayam Tamil Kovai Kings


இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

பேட்டிங் செய்ய வந்த காஞ்சி தொடக்க வீரர்கள் முகிலேஷ் 0 ரன், விஷால் வித்யா 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்,

தொடர்ந்து ஆட கேப்டன் பாபா அபராஜிதா, லோகேஷ்வர் ஆகியோர் சிறப்பாகா ஆடி வருகின்றனர். பவர் பிளே 6 ஓவர் முடிவில் 35/2 ரன்கள் எடுத்துள்ளனர்.

13 ஓவர் முடிவில் காஞ்சி அணி 85 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது.

சுரேஷ் லோகேஷ்வர் 51, அபராஜித் 29, சஞ்சய் யாதவ் 31, ஃப்ரான்ஸிஸ் ரோகின்ஸ் 25 ரன்கள் விளாசினர்.
குறிப்பாக ரோகின்ஸ் 7 பந்தில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடித்து 25 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால்
20 ஓவர் முடிவில் காஞ்சி அணி 6 விக்கெட் இழந்து 150 ரன்களை குவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்